தமிழ் நலக்கழகம் - பாரதி மன்றம் சார்பில் தமிழறிஞர் கா.சு.பிள்ளை சிலைக்கு மாலை அணிவிப்பு!. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 5 November 2022

தமிழ் நலக்கழகம் - பாரதி மன்றம் சார்பில் தமிழறிஞர் கா.சு.பிள்ளை சிலைக்கு மாலை அணிவிப்பு!.

மூத்த தமிழ் அறிஞர் உ.வே.சா.அவர்களின் மாணவரும் சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவரும் திராவிட இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு ஆசிரியராக இருந்தவரும் 60க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தவருமான தமிழ் அறிஞர்  திருநெல்வேலியைச் சேர்ந்த கா.சு.பிள்ளையின் 134 வது பிறந்த தினம் திருநெல்வேலி மாநகராட்சி முன்பாக உள்ள பூங்கா நினைவிடத்தில் நடைபெற்றது. 

அவரது நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த திரு உருவப் படத்திற்கு பாரதி முத்தமிழ் மன்ற செயலாளர் முனைவர் கோ.கணபதி சுப்ரமணியன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட தமிழ் நலக்கழகத்தின் சார்பில் அதன் செயலாளர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 


இந்நிகழ்வில் கா.சு.பிள்ளை அவர்களின் பேரன் கா.சுப்பிரமணியன் கவிஞர்கள் பிரபு, பொன் வேலுமையில், முத்துசாமி, ஓவியர் வள்ளிநாயகம்,  மேனாள் மாநகராட்சி மன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், மதிமுக இலக்கிய அணி சுதர்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad