ராதாபுரம் அருகே வாஷிங்மெஷினில் அடைத்து வைத்து சிறுவனை கொன்ற பெண் கைது. - தமிழக குரல்™ - திருநெல்வேலி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 9 September 2024

ராதாபுரம் அருகே வாஷிங்மெஷினில் அடைத்து வைத்து சிறுவனை கொன்ற பெண் கைது.


நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சாக்கு பையில் கட்டி வாஷிங்மெஷினில் அடைத்து வைத்து சிறுவனை கொன்ற பெண் கைது. 


செப்.10, நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்து குறிச்சி கீழத் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கொத்தனார் கையாளாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் ரம்யா. இன்று காலை தனது 3 வயது பையன் சஞ்சய் யுடன் தெருவில் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டே இருந்துள்ளார். காலை 9.15 மணிக்கு பையனை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்ல தேடிய போது காணவில்லை. 

உடனே அக்கம் பக்கத்தில் உள்ள வீடு மற்றும் தண்ணீர் தொட்டிகளில் தேடி உள்ளனர். காணவில்லை என்றதும் ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருந்த போதிலும் எதிர் வீட்டைச் சேர்ந்த தங்கம் கணவர் பெயர் ஆறுமுகம் என்பவருகும் விக்னேஷ் குடும்பத்திற்கும் மன வருத்தம் காரணமாக பேச்சுவார்த்தை கிடையாது. 

ஆகவே அவர் தன் குழந்தையை கடத்தி வைத்து இருக்கலாம் என்று போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் தங்கம் என்பவர் வீட்டிற்குள் சென்று சிறுவனை தேடியபோது வீட்டிலிருந்த வாஷிங் மிஷினில் சாக்கு பையில் போட்டு கட்டி வைத்திருந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். இதனைத் தொடர்ந்து போலீசார் தங்கத்தை பிடித்த போது அவர் போலீசாரிடமிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார். உடனே போலீசார் அவரை லாபகமாக பிடித்து ராதாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். 

சிறுவனை கொலை செய்து வாஷிங்மெஷினில் அடைத்து வைத்தாரா அல்லது வாஷிங் மிஷினில் வைத்து கொலை செய்தாரா , எதற்காக கொலை செய்தார் என்ற கோணத்தில் போலீசார் தங்கத்திடம் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad